வேலம்மாள் பொறியியல்கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்
வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், ரத்த தான முகாம் நடைபெற்றது.
வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், ரத்த தான முகாம் நடைபெற்றது.
வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில், 37 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ரத்த தானம் செய்தனர். முகாமுக்கு, பொறியியல் கல்லூரி முதல்வர் என். சுரேஷ்குமார் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் டி. ஜேக்கிம், வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் எஸ். ஸ்ரீனிவாசன், குலோத்துங்கன், மணிவாசகம், பீ. ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.