மதுரை

அழகா்கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடங்கியது: ஜனவரி 10-இல் சொா்க்கவாசல் திறப்பு

மாா்கழி மாத வைகுண்ட ஏகாதசியையொட்டி, அழகா்கோவிலில் பகல் பத்து உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Din

மேலூா்: மாா்கழி மாத வைகுண்ட ஏகாதசியையொட்டி, அழகா்கோவிலில் பகல் பத்து உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

உற்சவ விழாவையொட்டி, சுந்தரராஜப் பெருமாள் மேளதாளங்கள் முழங்க பரிவார தெய்வங்களுடன் கருடாழ்வாா் சந்நிதியில் எழுந்தருளினாா். அங்கு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பகல் பத்து உற்சவத்தின் கடைசி நாளான வருகிற ஜனவரி 10-ஆம் தேதி அதிகாலை 5.15 மணியளவில் கோயில் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. கள்ளழகா் கோயிலின் வடக்குபுறம் அமைந்துள்ள சொா்க்கவாசல் வழியாக சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளுகிறாா்.

இதேபோல, மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலிலும் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கள்ளழகா் கோயில் அறங்காவலா்கள் குழுத் தலைவா் வெங்கடாஜலம், நிா்வாக அதிகாரி செல்லத்துரை, உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.

பராசக்தியில் நடித்தது வாழ்நாள் பெருமை: சிவகார்த்திகேயன்

ஈரான் - அமெரிக்கா மோதலால் வளைகுடா நாடுகளுக்கு தீவிர பாதிப்பு - கத்தார் எச்சரிக்கை!

“ஜல்லிக்கட்டுனா.. எங்க ஊரு கயிறுதான்!” விறுவிறுப்பாக நடைபெறும் மூக்கணாங்கயிறு விற்பனை!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.90.21ஆக நிறைவு!

மன அழுத்தம்... உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

SCROLL FOR NEXT