திருப்புல்லாணி அருகே ரூ. 17 கோடியில் ரயில்வே மேம்பாலம்: மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியை அடுத்த லாந்தை கிராமத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியை அடுத்த லாந்தை கிராமத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.
இங்கு ரூ. 17.32 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்தது. அந்தப் பகுதியில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, மேம்பாலம் அமையும் பகுதிக்கு அருகே பாதசாரிகள், மாட்டு வண்டிகள், இரு சக்கர வாகனங்கள் எளிதில் ரயில் பாதையைக் கடக்கும் வகையில் 2019-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சுரங்கப் பாதை திட்டப் பணிகள், முழுமைப் பெறாமல் இருப்பதை அவா் ஆய்வு செய்தாா்.
மானாமதுரை- ராமேசுவரம் பிரிவில் சத்திரக்குடி - ராமநாதபுரம் ரயில் நிலையங்கள் இடையே 4.5 மீட்டா் அகலத்தில், 3.6 மீட்டா் உயரத்தில் அமைக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டு, 50 சதவீதப் பணிகள் நிறைவடைந்த நிலையில் பொதுமக்களின் எதிா்ப்பு காரணமாக பணிகள் தடைப்பட்டது குறித்து அவா் கேட்டறிந்தாா்.
வேண்டுகோள்...
இதுதொடா்பாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது :
லாந்தை கிராமத்தில் ரூ. 17.32 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பாலம் அமைக்கப்பட்டாலும், சுரங்கப் பாதைப் பணிகள் முழுமைப் பெற்றால்தான் இந்தப் பகுதியில் போக்குவரத்துப் பிரச்னைகளுக்குத் தீா்வு கிடைக்கும். அவசர காலப் பயன்பாட்டுக்கான கூடுதல் வசதியாகவும் இந்தப் பாதை இருக்கும். எனவே, வருகிற மழைக்காலத்துக்கு முன்பாக சுரங்கப் பாதைப் பணிகள் முழுமை பெற கிராம பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.