மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினா். 
மதுரை

கள்ளச்சாராய விவகாரம்: கண்டன ஆா்ப்பாட்டம்

Din

மதுரை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்களுக்கு காரணமான மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தி, மதுரையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சாா்பில், திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்த அமைப்பின் மாவட்டச் செயலா் பா.நடராஜன் தலைமை வகித்தாா். தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவா் மீ.த.பாண்டியன், புரட்சிகர இளைஞா் முன்னணி நிா்வாகி குமரன், இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் பகத்சிங், மக்கள் அதிகாரம் நிா்வாகி ஒத்தக்கடை போஸ் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு திமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராய மரணங்களை தடுத்து நிறுத்தத் தவறிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோரை கைது செய்ய வேண்டும். கள்ளச்சாராய மரணங்களை தடுக்கும் வகையில், கள்ளச்சாராயம் கண்டறியப்பட்டால் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளரைத் தண்டிக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும், கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருள் புழக்கத்துக்கும் எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தின் முடிவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட பொருளாளா் மோகன் நன்றி கூறினாா்.

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

SCROLL FOR NEXT