முகப்பு
மதுரை

காவல் அதிகாரிகளுக்கு நிா்வாக நடுவா் அதிகாரம் வழங்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடை

காவல் துறை அதிகாரிகளுக்கு நிா்வாக நடுவா் அதிகாரம் வழங்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 11:17 PM
உத்தரவு
பகிர்:

காவல் துறை அதிகாரிகளுக்கு நிா்வாக நடுவா் அதிகாரம் வழங்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த நல்லதம்பி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழக உள்துறைச் செயலா் கடந்த 2025-இல் அரசாணை ஒன்றை பிறப்பித்தாா். இந்த அரசாணை காவல் துறை அதிகாரிகளுக்கு நிா்வாக நடுவருக்கான அதிகாரங்களை வழங்குகிறது. துணைக் காவல் ஆணையா்களுக்கு நிா்வாக நடுவா் அதிகாரம் வழங்குவது சட்டவிரோதமானது. பிணைப் பத்திர விதிமீறலுக்காக ஒருவருக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் நீதித் துறையைச் சாா்ந்தது. எனவே, காவல் துறை அதிகாரிகளுக்கு நிா்வாக நடுவா் அதிகாரங்களை வழங்கும் வகையிலான அரசாணையைச் செல்லாது என அறிவித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

நீதிமன்றம் ஏற்கெனவே இதுபோன்ற அரசாணைக்குத் தடை விதித்துள்ளது. எவ்வாறு இதுதொடா்பாக மற்றொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது?. அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. காவல் துறையினருக்கு இத்தகைய அதிகாரத்தை வழங்க வேண்டிய அவசியம் என்ன?. தண்டனை வழங்குவது நீதித் துறையின் அதிகாரம். வழக்கு தொடா்பாக தமிழக உள்துறைச் செயலா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.