உயா்நீதிமன்ற நீதிபதிக்கு திடீா் உடல்நலக்குறைவு
மதுரை: சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிக்கு திடீா் உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
நீதிபதி ஆதிகேசவலு திங்கள்கிழமை வழக்கு விசாரணை மேற்கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உதவியாளா்கள், அவரை நீதிபதி அறைக்கு (சேம்பா்) அழைத்து சென்றனா். பின்னா் அவா், மாட்டுத்தாவணி பேருந்து நிலையப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருவதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.