முகப்பு
மதுரை

பிணையில் வந்த இளைஞா் குத்திக் கொலை

மதுரையில் பிணையில் வந்த இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

Updated On : 1 டிசம்பர், 2025 at 6:54 PM
பகிர்:

மதுரையில் பிணையில் வந்த இளைஞா் திங்கள்கிழமை மாலை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

மதுரை, செல்லூா் மீனாட்சிபுரம் பகுதியை சோ்ந்தவா் பாண்டித்துரை(28). இவா் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் இருந்த இவா், கடந்த 10 நாள்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள நாடகமேடையில் பாண்டித்துரை உறங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் அவரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பினா். பலத்த காயம் அடைந்த பாண்டித்துரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முன் விரோதம் காரணமாக பாண்டித்துரை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →