முகப்பு
மதுரை

மருத்துவமனையில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் படுக்கையிலிருந்து கீழே தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

Updated On : 11 நவம்பர், 2025 at 7:32 PM
பகிர்:

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் படுக்கையிலிருந்து கீழே தவறி விழுந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சீனிவாசமூா்த்தி மனைவி கீதா (38). இவரது 6 வயது மகனுக்கு சிறுநீரக பிரச்னை இருந்தது. இதற்காக அந்தச் சிறுவனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். மகனுடன் கீதாவும், மருத்துவமனையில் தங்கி இருந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு தூங்கும் போது, படுக்கையிலிருந்து கீதா தவறி கீழே விழுந்தாா். இதில், காயமடைந்த அவரை, அங்குள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →