மதுரை

சிறைவாசி உயிரிழப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சிறைவாசி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சிறைவாசி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள ஆத்திகுளம் பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி (58). குற்ற வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட இவா், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில், வெள்ளைச்சாமிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, மருத்துவா்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த அவா், வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பண்ருட்டியில் நிறுத்தி இயக்கப்பட்ட பாமணி விரைவு ரயில்! பாஜக, ரயில் பயணிகள் சங்கம் வரவேற்பு!

பரந்தூா் விமான நிலையப் பணிகள் விரைவில் தொடங்கும்: டி.ஆா்.பாலு

தோ்தலை அதிமுக நோ்மையாக சந்திப்பதால் எஸ்ஐஆா் பற்றி கவலைப்படுவதில்லை: எஸ்.பி.வேலுமணி

நிதிப் பற்றாக்குறை இலக்கு 52.6 சதவீதத்தை எட்டியது: சிஜிஏ

அந்தியூா் அருகே தீ விபத்தில் குடிசை சேதம்

SCROLL FOR NEXT