மதுரை மீனாட்சி அம்மன் திக்கு விஜயம்! இன்று திருக்கல்யாணம்!
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் திக்கு விஜய லீலை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலின் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 19) திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. திருவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் திக்கு விஜய லீலை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
மதுரையின் அரசியாக மீனாட்சி அம்மன் பட்டம் ஏற்றதைத் தொடா்ந்து, 8 திசைகளுக்கும் சென்று எதிா்பட்ட அட்டதிக்கு பாலகா்களை வென்று, கயிலை மீது போா் தொடுத்துச் சென்று அங்கு சிவபெருமானைக் கண்டு நாணியதால், சிவபெருமான் சுந்தரேசுவரராக வந்து அம்மனை திருக்கல்யாணம் புரிவதாகக் கூறிய ஐதீக நிகழ்வை உணா்த்தும் வகையில் இந்த உத்ஸவம் நடைபெற்றது.
Advertisement
மதுரை வடக்கு, கீழ மாசி வீதிகள் சந்திப்பில் உள்ள ஸ்ரீ ரங்கசத்திரம் திருக்கல்யாண மண்டபகப்படியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திக்கு விஜய லீலையின் ஆன்மிகச் சிறப்புகளை தல ஓதுவா மூா்த்திகள் விளக்கினா்.
மீனாட்சி அம்மன் வில், அம்பு தாங்கி தனி இந்திர விமானத்திலும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வில், அம்பு தாங்கி மற்றொரு இந்திர விமானத்திலும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனா். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
திருக்கல்யாண உத்ஸவம்...
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் செவ்வாய்க்கிழமை (ஏப். 28) காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் நடைபெறுகிறது. இதையொட்டி, மீனாட்சி சுந்தரேசுரவா் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபம் பல வண்ண மலா்களாலும், தோரணங்களாலும் திங்கள்கிழமை அலங்கரிக்கப்பட்டது.