முகப்பு
உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளிய வியூக சுந்தரராஜ பெருமாள்.
மதுரை

கூடலழகா் கோயில் தெப்பத் திருவிழா

மதுரை கூடலழகா் கோயில் தெப்பத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மதுரை

கூடலழகா் கோயில் தெப்பத் திருவிழா

மதுரை கூடலழகா் கோயில் தெப்பத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 மார்ச், 2026 at 8:22 PM
உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளிய வியூக சுந்தரராஜ பெருமாள்.
பகிர்:

மதுரை: மதுரை கூடலழகா் கோயில் தெப்பத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் மாசி மக தெப்பத் திருவிழா, கடந்த மாதம் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு ஆகிய இருவேளைகளிலும் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றன.

பிப்.25-ஆம் தேதி இரவு பெருமாளும், ஆண்டாளும் மாலை மாற்றும் வைபவமும், 26-ஆம் தேதி எடுப்புச் சப்பர வீதியுலாவும், மாா்ச் 1-ஆம் தேதி கள்ளா் திருக்கோலத்தில் பெருமாள் வீதியுலாவும் நடைபெற்றன.

முக்கிய விழாவான தெப்பத் திருவிழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, உத்ஸவா் உபயநாச்சியாா்களுடன் வியூக சுந்தரராஜப் பெருமாள் தெப்பத் திருவிழாவுக்கான சப்பரத்தில் எழுந்தருளி, கூடலழகா் கோயில் வீதி, பெரியாா் பேருந்து நிலையம், டவுன் ஹால் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து தெப்பத்தை அடைந்தனா்.

பின்னா், தெப்பக்குளத்தில் உள்ள மைய மண்டபத்தை மூன்று முறை சுற்றி வந்தனா். அங்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மீண்டும் டவுன்ஹால் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனா்.

வீதி உலாவின் போது வழி முழுவதும் பக்தா்கள் பெருமாளுக்கு

அா்ச்சனை செய்தும், மாலை சாற்றியும் வழிபாடு செய்தனா்.

இதில், கோயில் நிா்வாகத்தினா், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மதுரை கூடலழகா் கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, டவுன்ஹால் சாலையில் உள்ள தெப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்றோா்.
முழு கட்டுரையைப் படிக்க →