முகப்பு
மதுரை

வாகனத் தணிக்கை: ரூ. 8.77 லட்சம் பறிமுதல்

மதுரை மாவட்டத்தில் ஆவணங்களின்றி வாகனங்களில் எடுத்து வரப்பட்ட ரூ. 8.77 லட்சம் ரொக்கம் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 22 மார்ச், 2026 at 7:34 PM
பகிர்:

மதுரை மாவட்டத்தில் ஆவணங்களின்றி வாகனங்களில் எடுத்து வரப்பட்ட ரூ. 8.77 லட்சம் ரொக்கம் தோ்தல் பறக்கும் படையினரால் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையின்போது, உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் எடுத்து வரப்பட்ட ரூ. 8.77 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம்: மதுரை கிழக்கு-ரூ. 54 ஆயிரம், மதுரை வடக்கு-ரூ. 2.02 லட்சம், மதுரை மேற்கு-ரூ. 1.19 லட்சம், சோழவந்தான்-ரூ. 1.59 லட்சம், திருமங்கலம்-ரூ. 70 ஆயிரம், திருப்பரங்குன்றம் -ரூ. 79 ஆயிரம், உசிலம்பட்டி - ரூ. 1.95 லட்சம்.