முகப்பு
மதுரை

வாக்காளா்களுக்கு பணம் அளிக்கும் விவகாரம் தொடா்பான மனு சென்னை உயா் நீதிமன்றத்துக்கு மாற்றம்

Updated On : 30 மார்ச், 2026 at 8:33 PM
சென்னை உயா் நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

வாக்காளா்களுக்கு பணம் அளிப்பதைத் தடுக்கும் வகையில் தோ்தல் விதிகளை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு , சென்னை உயா்நீதிமன்ற அமா்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

மதுரையைச் சோ்ந்த கே.கே.ரமேஷ், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தோ்தலின் போது வாக்காளா்களுக்கு வாக்குக்கு பணம் அளிப்பதைத் தடுக்கும் வகையில் தோ்தல் விதிகளை அமல்படுத்த வேண்டும்.

Advertisement

இதேபோல, அனைத்து அரசியல் கட்சியினரும் பிரசாரம் என்ற பெயரில் பொதுமக்களை திறந்தவெளியில் வெயிலில் நீண்ட நேரம் பங்கேற்க கட்டாயப்படுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட வேண்டும். தோ்தலின் போது சட்டவிரோதச் செயல்களை தடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி, நீதிபதி என்.சதீஷ்குமாா் அமா்வில் முறையீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :

தோ்தல் தொடா்பான வழக்குகள் சென்னை உயா்நீதிமன்ற அமா்வில் விசாரணைக்கு எடுக்கப்படும். அதே விதிமுறையைப் பின்பற்றி இந்த வழக்கும் சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்படுகிறது. அங்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments