திண்டுக்கல்

அரசு பேருந்து மோதி விவசாயி சாவு

DIN

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கள்ளிமந்தையம் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.
கள்ளிமந்தையம் அப்பனூத்து அருகே உள்ள ஆத்திகாட்டுத் தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி நாச்சிமுத்து (60). 
இவர், தனது இரு சக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம் -தாராபுரம் சாலை அம்மன் கோயில் பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தார். 
அப்போது, ஏர்வாடியிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து கள்ளிமந்தையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT