திண்டுக்கல்

கொடைக்கானலில் கஞ்சா செடி வளர்ப்பு: 2 பேர் கைது, துப்பாக்கி பறிமுதல்

DIN

கொடைக்கானலில் கஞ்சா செடி வளர்த்த இருவரை திங்கள்கிழமை  போலீஸார் கைது செய்து கஞ்சா செடிகள் மற்றும் நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறைப் பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக அப் பகுதியைச் சேர்ந்த சிலர் கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் போலீஸார் சம்பவ இடத்திற்கு  சென்றனர். அப்போது விவசாய தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
போலீஸாரைக் கண்டதும் அங்கிருந்த இரண்டு பேர் தப்பி ஓட முயன்றனர் அவர்களை போலீஸார் விரட்டி பிடித்தனர்.  விசாரணையில் அவர்கள் மூலக்காடு பகுதியைச் சேர்ந்த மலைச்சாமி(60) மற்றும் ஜெயக்குமார்(39) ஆகியோர் எனத் தெரியவந்தது.  அவர்கள் தோட்டத்தில் வளர்த்து இருந்த 30-கஞ்சா  செடிகளையும்,  அனுமதியில்லாமல் வைத்திருந்த ஒரு நாட்டுத் துப்பாக்கியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.   இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT