திண்டுக்கல்

பிரதமரின் முத்ரா வங்கி கடன் திட்ட சிறப்பு ஆலோசனைக் கூட்டம்

DIN

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் பாஜக அறிஞர் பிரிவு சார்பாக, பிரதமரின் முத்ரா வங்கி கடன் திட்டத்தின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட அறிஞர் பிரிவு தலைவர் அழகுமணி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்புச் செயலர் சிவா, மாவட்ட பொதுச் செயலர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை விகித்தனர்.  இதில், சிறப்பு விருந்தினராக கட்சியின் தேசியப் பொதுக் குழு உறுப்பினர் வி.எல். நரசிம்மன் பங்கேற்று பேசுகையில், முத்ரா வங்கி கடன் திட்டத்தின் மூலம் மானியத்துடன் கூடிய கடன் பெறுவது எவ்வாறு என்றும், வங்கியில் கடன் தர மறுத்தால் உடனடியாக பாஜக பொதுச் செயலர் மற்றும் தலைவரை அணுகலாம் என்றும் பேசினார்.
கூட்டத்தில், பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, அறிஞர் பிரிவு மாவட்டச் செயலர் அழகர்சாமி வரவேற்றார்.  முடிவில், அறிஞர் பிரிவு மாவட்டச் செயலர் சங்கர் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT