பரப்பலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் அடுத்து வடகாடு மலைப்பகுதியில் உள்ள பரப்பலாறு அணையின் மொத்த உயரம் 90 அடியாகும். இந்த அணையின் மூலம் பெருமாள்குளம், முத்துபூபாலசமுத்திரகுளம், சடையன்குளம், செங்குளம், ஜவ்வாதுப்பட்டி பெரியகுளம் உள்ளிட்ட குளங்கள் பாசன வசதி பெறுகின்றன. இவற்றின் மூலம் சுமார் 2,323 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் 63 அடியாக இருந்த நீர்மட்டம் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் ஒரே நாளில் மூன்றரை அடி உயர்ந்து 66.5 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு 60 கன அடி வீதம் நீர் வரத்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.