திண்டுக்கல்

கொடைக்கானலில் பூட்டிய கடையை உடைத்து செல்லிடப்பேசிகள் திருட்டு

DIN

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் செல்லிடப்பேசி கடை வைத்திருப்பவர் அப்பாஸ். இவர் வழக்கம் போல் தனது கடையை திங்கள்கிழமை இரவு பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் தனது கடையைத் திறக்க சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டார்.  இதனைத் தொடர்ந்து அவர் அளித்த தகவலின் பேரில் கொடைக்கானல் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.  
கடையிலிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான செல்லிடப்பேசிகள் , லேப் டாப் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டிருந்தன. இது குறித்து அப்பாஸ் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT