பழனி வட்டாட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை மாநில அரசை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் ஜேக்டோ- ஜியோ அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பழனி வட்டாரத் தலைவர் மகுடீஸ்வரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு கெளரவத் தலைவர் மாரியப்பன், மாவட்டச் செயலர் ராமன், மாநில பொருளாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.