பாதம் கழுவும் சடங்கு நிகழ்ச்சி
கொடைக்கானலில் உள்ள தேவாலயங்களில் பாதம் கழுவும் சடங்கு நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
கொடைக்கானலில் உள்ள தேவாலயங்களில் பாதம் கழுவும் சடங்கு நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கொடைக்கானலில் மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் மறைவட்ட அதிபர் எரோணிமுஸ் தலைமையிலும், செண்பகனூர் புனித சவேரியார் ஆலயத்தில் பங்குத் தந்தை ஏஞ்சல்ராஜ் தலைமையிலும், உகார்த்தே நகர் அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் பங்குத் தந்தை எட்வின் சகாயராஜ் தலைமையிலும், நாயுடுபுரம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்குத் தந்தை அடைக்கலராஜ் தலைமையிலும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.