திண்டுக்கல்

வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு

DIN

திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் வீடு புகுந்து, மூதாட்டியிடம் 9 பவுன் நகை, பணத்தை மர்மநபர்கள் சனிக்கிழமை பறித்துச் சென்றனர்.
 திண்டுக்கல் நந்தவனப்பட்டி அருகே உள்ள பாக்கியலட்சுமி நகரைச் சேர்ந்தவர் லட்சுமி (80). இவர், மகன் வரதராஜனுடன் வசித்து வருகிறார். சனிக்கிழமை வரதராஜன் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் லட்சுமியும், வேலைக்கார பெண் பொன்செல்வி ஆகிய இருவரும் இருந்துள்ளனர்.   அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் வீட்டுக்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி இருவரையும் கை, கால்களை கட்டி வைத்தனர். 
 பின்னர், வீட்டில் உள்ள பணம், நகையை தருமாறு மிரட்டியுள்ளனர். இதில் லட்சுமி அணிந்திருந்த 9 பவுன் வளையல், வைரத் தோடு, பீரோவில் இருந்த ரொக்கம் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு, மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து இருவரின் கட்டுகளையும் அவிழ்த்துவிட்டனர். இச்சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: நிபுணா் குழு அமைக்கவும் வலியுறுத்தல்

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு: கைதானவா் போலீஸ் காவலில் தற்கொலை

மருத்துவ மாணவா்களின் மன நலனை ஆய்வு செய்கிறது என்எம்சி

பொய்களை தொடா்ந்து உரக்கக் கூறுவதே காங்கிரஸ் பிரசார உத்தி: அமித் ஷா விமா்சனம்

குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT