திண்டுக்கல்

பழனியில் சாரல் மழை

DIN

பழனியில் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் ஒரு மணி நேரம் லேசான காற்றுடன் சாரல் மழை பெய்தது. 
   பழனியில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் நிலவி வந்த நிலையில் திங்கள்கிழமை இரவு லேசான சாரல் மழை பெய்தது.  செவ்வாய்க்கிழமை மாலை லேசான காற்றுடன் சாரல் மழை சுமார் ஒருமணி நேரம் பெய்தது. மேகமூட்டம் காரணமாக இருள் சூழ்ந்ததால் மாலை நேரத்திலேயே வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. 
பள்ளி மாணவர்கள் குடைகள் இன்றி மழையில் நனைந்தபடியே சென்றனர். பழனி மட்டுமன்றி ஆயக்குடி, கணக்கன்பட்டி, கலையமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.  இதனால் நகரில் குளுமையான சூழல் நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT