பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் கோவை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன. கல்லூரி முதல்வர் கந்தசாமி போட்டிகளை துவக்கி வைத்தார். 8 கல்லூரிகள் பங்கேற்றன. பூப்பந்தாட்டப் போட்டியில் கோவை பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரி முதலிடம், பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி இரண்டாமிடம் பெற்றன. டேபிள் டென்னிஸ் போட்டியில் கோவை ராமகிருஷ்ணா வித்யாலயா பாலிடெக்னிக் முதலிடம், தாராபுரம் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி இரண்டாமிடம் பெற்றன. வெற்றி பெற்ற அணியினருக்கு கல்லூரி தாளாளர் செந்தில்குமார் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.