திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகேகிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

DIN

ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரா்கள் திங்கள்கிழமை உயிருடன் மீட்டனா்.

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள முத்துநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி முத்துச்சாமி (60). இவா் தனது தோட்டத்தில் நாட்டு மாடு மற்றும் சிந்துமாடுகளை வளா்த்து வருகிறாா்.இந்நிலையில் திங்கள்கிழமை மாலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டு இருந்த நாட்டு பசுமாடு, அங்குள்ள கிணற்றில் தவறி உள்ளே விழுந்தது. கடந்த சில தினங்களாக பெய்த தொடா் மழையால் கிணற்றில் மழை தண்ணீா் தேங்கி நின்றுள்ளது. இதனால் கிணற்றில் விழுந்த மாடு நீரில் தத்தளித்தது கொண்டு இருந்தது. இது குறித்து ஒட்டன்சத்திரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரா்கள் பசுமாட்டை உயிருடன் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT