திண்டுக்கல்

ஆடு மேய்க்க சென்ற சிறுமி கிணற்றில் தவறி விழுந்து பலி

DIN

 எரியோடு அருகே ஆடு மேய்க்கச் சென்ற 13 வயது சிறுமி, சனிக்கிழமை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகள் அனுசியா(13). அதே பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை விடுமுறை என்பதால், அருகிலுள்ள பகுதிக்கு ஆடு மேய்க்கச் சென்றுள்ளார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் 2 சிறுமிகளும் சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள கிணற்றில் அனுசியா தவறி விழுந்துவிட்டாராம். இதனை அடுத்து உதவி கேட்டு உடன் சென்ற சிறுமிகள் கூச்சலிட்டுள்ளனர். அதன் மூலம் அக்கம் பக்கம் இருந்தவர்கள் கிணற்றுக்கு சென்று சிறுமி அனுசியாவை மீட்டபோது, அவர் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து எரியோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

SCROLL FOR NEXT