திண்டுக்கல்

உலக புகையிலை தின  விழிப்புணர்வு பேரணி

ஒட்டன்சத்திரத்தில் உலக புகையிலை தின விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

DIN

ஒட்டன்சத்திரத்தில் உலக புகையிலை தின விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் சி.எப்.மருத்துவமனையில் தொடங்கிய பேரணியை அதன் கண்காணிப்பாளர் ஜார்ஜ் பிலிப் தொடக்கி வைத்தார். இந்த பேரணி ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம், பழனி சாலை வழியாகச் சென்று கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அதில் பல் மருத்துவர் ஆனந்தன், பள்ளிதலைமை ஆசிரியர் வடிவேல் ஆகியோர் பள்ளி மாணவர்களிடம் புகையிலையினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கிப் பேசினர்.
இந்த பேரணியில் சி.எப்.மருத்துவமனையின் செவிலியர்கள், கிறித்துவ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT