திண்டுக்கல்

வாய்க்காலில் தவறி விழுந்த கூலி தொழிலாளி சாவு

பழனி அருகே வாய்க்காலில் தவறி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்தார்.

DIN

பழனி அருகே வாய்க்காலில் தவறி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
      பழனியை அடுத்த காரமடை வையாபுரி கண்மாயிலிருந்து மறுகால் நீர்வடியும் வாய்க்கால் பகுதியில், திங்கள்கிழமை சடலம் மிதந்துள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், சடலத்தை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பழனி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.       இந்நிலையில், இறந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம்(50) என்றும், அவர் 2 நாள்களுக்கு முன் காணாமல்போய் உறவினர்களால் தேடப்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர், வாய்க்கால் பகுதியில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை

SCROLL FOR NEXT