திண்டுக்கல்

தேர்தல் செலவின மேற்பார்வையாளர்கள் ஆலோசனை

DIN

திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் செலவின  மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள வருமான வரித்துறை அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.    
   திண்டுக்கல் மக்களவைத் தேர்தல் செலவின மேற்பார்வையாளராக வருமான வரித்துறை அதிகாரி லோகேஷ்குமார் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பு மனு தாக்கலின்போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டார். 
 இதேபோல், கரூர் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள வேடசந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் செலவினப் பார்வையாளர்களாக வருமான வரித்துறை அலுவலர்கள் அம்பர்கர் மற்றும் மனோஜ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது முன்னிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வேடசந்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT