திண்டுக்கல்

மணல் கடத்தலை தடுத்த பாஜக நிர்வாகிக்கு மிரட்டல்

DIN

சாணார்பட்டி அருகே மணல் கடத்தலை தடுத்த பாஜக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
     திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள வீரசின்னம்பட்டியைச் சேர்ந்த பாஜக ஒன்றியச் செயலர் தனபால். இந்நிலையில், கடம்பவனம் பகுதியில் சிலர் மணல் அள்ளியதாகவும், அதனை அப்பகுதி மக்களுடன் சென்று தனபால் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.     மேலும், மணல் கடத்தல் தொடர்பாக காவல் நிலையத்திலும் தனபால் புகார் அளித்துள்ளார்.     இதனால், சரவணன் என்பவர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், பாதுகாப்பு வழங்கக் கோரியும், தனபால் சாணார்பட்டி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT