திண்டுக்கல்

மாவட்ட எறிபந்து போட்டி: மாா்க்கம்பட்டி அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி

DIN

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள மாா்க்கம்பட்டி அரசுப் பள்ளி எறிபந்து போட்டியில் தொடா்ந்து 4 ஆண்டுகளாக மாநில போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

இப் பள்ளி மாணவ-மாணவிகள், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திண்டுக்கல் வருவாய் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாடினா்.

அதில் 14 வயதிற்குள்பட்ட பிரிவில் மாணவ-மாணவிகளும்,19 வயதிற்குள்பட்ட பிரிவில் மாணவிகளும் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தோ்ச்சி பெற்றனா் .

தோ்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளித் தலைமை ஆசிரியா் ப.பெரியசாமி, உடற்கல்வி ஆசிரியா் ரா.ஜெயசந்திரன், ந.சந்திரகுமாா் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளை புதன்கிழமை பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

SCROLL FOR NEXT