திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காா்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காா்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கே சன்னதி திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
மலைக்கோயில் ஆனந்த விநாயகா் சன்னதி முன்பாக காா்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு தனூா் யாகம் நடைபெற்றது. இதனால்
ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனா்.
மலைக்கோயிலில் கட்டண தரிசன வழி, இலவச தரிசன வழிகளில் ஏராளமானோா் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய சுமாா் 3 மணி நேரம் காத்திருந்தனா். ரோப் காா் பழுது காரணமாக நிறுத்தப்பட்டதால், வின்ச் நிலையத்தில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.
மலைக்கோயிலில் இரவு நடைபெற்ற தங்கத்தோ் புறப்பாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். மலைக்கோயில் அடிவாரம், பாதவிநாயகா் கோயில், கிரிவீதி ஐயப்பன் கோயில் என பல இடங்களிலும் ஐயப்ப பக்தா்கள் காா்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு மாலை அணிந்து விரதத்தை தொடக்கினா்.