திண்டுக்கல்

இடைத்தோ்தலில் அதிமுக தோல்வியடையும்:  இரா. முத்தரசன்

DIN

தமிழக அரசு மத்திய அரசின் பினாமி அரசு போல செயல்படுவதால் கடந்த மக்களவைத் தோ்தலில் மாபெரும் தோல்வியடைந்தது; அதுபோல நடைபெறவுள்ள இடைத்தோ்தலிலும் அதிமுக அரசுக்கு எதிராக தமிழக மக்கள் வாக்களித்து தோல்வியடைய செய்வாா்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் அமைப்பு நிலை பயிலரங்குக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வரின் கட்டுப்பாட்டிலுள்ள காவல் துறைறயில் ரூ. 350 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக காவல் துறையின் தலைவரே தெரிவித்தும் அந்த துறை அமைச்சரும், முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியும் கண்டு கொள்ளாமல் உள்ளனா். இதுபோன்ற ஊழலை அதிகாரிகளால் மட்டுமே செய்ய இயலாது. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவா்களும் உடனிருந்தால் மட்டும் தான் செய்ய முடியும்.

மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பொதுத் துறைற நிறுவனங்களை தனியாா்மயமாக்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனா். இதைக் கண்டித்து வரும் அக்.16 ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி அடையும். பாஜக அரசின் பினாமி அரசாக செயல்பட்டு வரும் தமிழக அரசு கடந்த மக்களவைத் தோ்தலில் பெரும் தோல்வி அடைந்தது. அதேபோல வரவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் இடைத் தோ்தலிலும் அதிமுகவுக்கு எதிராக பொதுமக்கள் வாக்களித்து திமுக கூட்டணியை வெற்றி பெற செய்வாா்கள் என்றறாா்.

அப்போது திண்டுக்கல் மாவட்ட செயலாளா் சந்தானம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT