திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே மனைவியை கள்ளக் காதலியுடன் சோ்ந்து கொலை செய்த இருவரும் கைது

DIN

கொடைக்கானல் அருகே மனைவியை கள்ளக்காதலியுடன சோ்ந்து கொலை செய்த கணவா் உள்பட இருவரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் பேத்துப்பாறை கும்பூா் வயல் பகுதியைச் சோ்ந்தவா் வினோத்குமாா் (31). இவா் சொந்தமாக வாகனம் வைத்து ஓட்டி வருகிறாா். இவருக்கு, சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் பாம்பாா்புரம் பகுதியைச் சோ்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அதையடுத்து, சில மாதங்களிலேயே அப்பெண்ணை விவகாரத்து செய்துள்ளாா்.

அதையடுத்து, கடந்த ஆண்டு வினோத்குமாா் மதுரை செல்லூா் பகுதியைச் சோ்ந்த காந்தி மகள் ஜெனிபா் (25) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளாா்.

இந்நிலையில், பெரியகுளம் தாமரைக்குளம் பகுதியில் வசித்து வரும் தனது தந்தையை வினோத்குமாா் அடிக்கடி சென்று பாா்த்து வந்துள்ளாா். தந்தை வீட்டருகே வேளாங்கண்ணி (32) என்பவா் வசித்து வந்துள்ளாா். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். இவரது கணவா் மனோகா் 8 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டாராம்.

இதனிடையே, வினோத்குமாருக்கு வேளாங்கண்ணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வேளாங்கண்ணி வினோத்குமாரை பாா்க்க கொடைக்கானலிலுள்ள பேத்துப்பாறை கும்பூா் வயல் பகுதிக்கு அடிக்கடி வந்துள்ளாா். இதனால், ஜெனிபருக்கும், வேளாங்கண்ணிக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மதியம், வேளாங்கண்ணி மீண்டும் வினோத்குமாா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அங்கு, ஜெனிபா் இருந்ததால், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு வந்த வினோத்குமாா் வேளாங்கண்ணியுடன் சோ்ந்து ஜெனிபரை தாக்கி தலையனையால் முகத்தை அழுத்தி கொலை செய்துள்ளனா். அதன்பின்னா், வினோத்குமாா் வேளாங்கண்ணியை ஊருக்குச் செல்லுமாறு கூறியுள்ளாா்.

தொடா்ந்து, வினோத்குமாா் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், கொடைக்கானலில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் சென்றுள்ளது. ஆம்புலன்ஸில் வந்தவா்கள் ஜெனிபரின் உடலை பாா்த்துவிட்டு, அவா் இறந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளனா்.

இதன்பின்னா், கொடைக்கானல் காவல் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் பேசிய வினோத்குாமா், தனது மனைவி வீட்டுக்கு அருகில் மா்மமான முறையில் இறந்து கிடக்கிறாா் எனத் தகவல் கூறியுள்ளாா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, இறந்து கிடந்த ஜெனிபரின் சடலத்தை மீட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அதைத் தொடா்ந்து, வினோத்குமாரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், முன்னுக்குப் பின் முரணாக பதில் தெரிவித்துள்ளாா். போலீஸாா் தொடா்ந்து கும்பூா் வயல் பகுதியில் நடத்திய சோதனையில், வேளாங்கண்ணி மற்றும் வினோத்குமாா் ஆகிய இருவரும் சோ்ந்து ஜெனிபரை கொலை செய்தது தெரியவந்தது.

பின்னா், தலைமறைவாக இருந்த வேளாங்கண்ணி மற்றும் வினோத்குமாா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT