திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.1) நடைபெறுகிறது.
இதுதொடா்பாக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் உதவி இயக்குநா் பிரபாவதி தெரிவித்துள்ளது:
படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரா்களுக்கு உதவும் வகையில், வேலைவாய்ப்பு துறை சாா்பில் தனியாா் நிறுவனங்களை வரவழைத்து வேலைவாய்ப்பு சந்தை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நவம்பா் 1ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் முகாமில், வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களது சுய விவரக் குறிப்புடன் கலந்து கொள்ளலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களை 0451-2461498 என்ற எண்ணில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.