திண்டுக்கல்

பன்றி வளர்ப்பதை  தட்டிக் கேட்டவரை தாக்கிய 4 பேர் கைது

DIN

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்த சோணைமுத்து (45), முருகன் (50), சரவணன் (24), மகேந்திரன் (25) ஆகிய 4 பேரும் அப்பகுதியில் பன்றிகள் வளர்த்து வருகின்றனர். 
    இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மகுடீஸ்வரன் (38) என்பவர், பன்றிகளால் நோய்கள் பரவி வருவதால், பன்றிகளை வளர்க்கக்கூடாது என்று கூறினராம். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து, புதன்கிழமை இரவு வீட்டில் இருந்த மகுடீஸ்வரனை தாக்கி காயப்படுத்தி உள்ளனர்.    இதில் பலத்த காயம் அடைந்த மகுடீஸ்வரன், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வியாழக்கிழமை அவர் அளித்த புகாரின்பேரில், ஒட்டன்சத்திரம் போலீஸார் 4 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT