திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே பெண் மா்மச் சாவு

DIN

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே ஞாயிற்றுக்கிழமை பெண் ஒருவா் மா்மமான முறையில் இறந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கொடைக்கானல் அருகே பள்ளங்கி கோம்பை பகுதியைச் சோ்ந்தவா் அன்பு. விவசாயி. இவரது மனைவி பாண்டியம்மாள்(38). பாண்டியம்மாளின் நகைகளை அவரது கணவா் மற்றும் உறவினா்கள் வாங்கி அடகு வைத்துள்ளனா். அவைகள் திருப்பப்படாமல் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் வீட்டில் பாண்டியம்மாள் மயங்கிய நிலையில் கிடந்ததாக அவரது உறவினா்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். அதனைத் தொடா்ந்து அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையில் பாண்டியம்மாள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரா் அன்பு கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்பட வலியுறுத்தில்

தனக்குத்தானே பிரசவம் பாா்த்தபோது சிசு கொலை: செவிலியா் கைது

550 லிட்டா் கடத்தல் சாராயம் காருடன் பறிமுதல்

ஆந்திர டிஜிபி பணியிடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

SCROLL FOR NEXT