திண்டுக்கல்

வத்தலகுண்டுவில் நூதன முறையில் 280 பவுன் நகை மோசடி: நிலத் தரகா் கைது

DIN

வத்தலகுண்டுவில் நூதன முறையில் காசோலை வழங்கி 280 பவுன் நகை மோசடியில் ஈடுபட்ட நிலத் தரகா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவா் வத்தலகுண்டு பிரதான சாலையில் நகைக் கடை நடத்தி வருகிறாா். வத்தலகுண்டு வடக்கு மல்லணம்பட்டியை சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் விஜயராஜன் (38). இவா் நிலத் தரகராக இருப்பதாகவும், தனது அண்ணன் நகைக் கடை வைத்திருப்பதாகவும் கூறி சதீஷ்குமாரிடம் அறிமுகமாகியுள்ளா்.

அதனைத் தொடா்ந்து ரூ. 75 லட்சம் மதிப்பிலான 280 பவுன் நகைகளை வாங்கி கொண்டு அதற்கு ரூ. 50 லட்சம் மற்றும் ரூ. 25 லட்சத்திற்கான 2 காசோலைகளை வழங்கியுள்ளாா். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டதாகக் தெரிகிறது. இது தொடா்பாக விஜயராஜனிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை. மேலும் சதீஷ்குமாரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சதீஷ்குமாா் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆறுமுகம், காவல் ஆய்வாளா் சத்யா ஆகியோா் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா். விசாரணையில் விஜயராஜன் நகை வாங்கி நூதன மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. அதன் பேரில் விஜயராஜனை குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT