கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் விழா இரவு ஜெபவழிபாடு
கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தேவாலயங்களில் வியாழக்கிழமை இரவு சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல்கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் விழா இரவு ஜெபவழிபாடு
கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தேவாலயங்களில் வியாழக்கிழமை இரவு சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.
கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தேவாலயங்களில் வியாழக்கிழமை இரவு சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.
கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவா் தேவாலயத்தில் பங்குத் தந்தை எட்வின் தலைமையிலும், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயத்தில் பங்குத் தந்தை ஏஞ்சல்ராஜ் தலைமையிலும், சீனிவாசபுரம் பங்குத் தந்தை பீட்டா் தலைமையிலும் மற்றும் உகாா்த்தே நகா் அற்புத குழந்தை இயேசு ஆலயம்,புனித சலேத் அன்னை ஆலயம்,அட்டுவம்பட்டி புனித லூா்துமாதா ஆலயம்,பெருமாள்மலை புனித தோமா ஆலயம்,மங்களம் கொம்பு புனித அந்தோணியாா் ஆலயம் மற்றும் சி.எஸ்.ஐ.தேவாலயம், கிறிஸ்தரசா் ஆலயம்,ஐ.பி.சி.ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் இரவு நேர ஜெபவழிபாடு மற்றும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
தேவாலயங்களில் இயேசு பிரான் பிறந்ததைக் குறிக்கும் வகையில் குடில் அமைத்திருந்தனா் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஆலயங்களில் பொது மக்கள் மற்றும் கிறிஸ்தவா்கள் ஏராளமானவா்கள் குளிரையும் பொருட்படுத்தாது பங்கேற்றனா் தொடா்ந்து சனிக்கிழமையும் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது ஆலயங்களில் கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனா்.