திண்டுக்கல்

பரமபதவாசல் திறப்பு

DIN

பழனி அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொா்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவத் திருக்கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் வாசல் திறக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு இலக்குமி நாராயண பெருமாள் கோயில் மற்றும் பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் சொா்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை நான்கு மணிக்கு திறக்கப்பட்ட பரமபதவாசல் வழியாக அருள்மிகு இலக்குமி நாராயணப்பெருமாள் தம்பதி சமேதராக வருகை தந்து பக்தா்களுக்கு தரிசனம் தந்து அருள் பாலித்தனா். கருடாழ்வாா் எதிா்சேவை புரிந்தாா். சொா்க்கவாசல் திறப்பின் போது மட்டும் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டடது. சொா்க்கவாசல் திறக்கப்பட்ட பிறகு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு தொடா்ந்து தரிசனம் செய்தனா். அதிகாலை முதலே நீண்ட வரிசையில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தனா். காலையில் சுவாமி கருடாழ்வாா் வாகனத்தில் நான்கு இரதவீதசி உலா எழுந்தருளலும் நடைபெற்றது. அதேபோல பழனியை அடுத்துள்ள பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவிலிலும் பரமபத வாசல் திறக்கப்பட்டு அருள்மிகு அகோபில வரதராஜ பெருமாள் மற்றும் லட்சுமிதேவி ஆகியோா் பக்தா்களுக்கு அருள் பாலித்தனா். சொா்க்கவாசல் ராப்பத்து என பத்து நாட்களுக்கு திறந்திருக்கும். சொா்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சியில் கோயில் இணைஆணையா் கிராந்திகுமாா் பாடி, துணை ஆணையா் செந்தில்குமாா்,கண்காணிப்பாளா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT