பழனி அருகே குடும்பத் தகராறில் மகன்களால் கத்தியால் குத்தப்பட்ட வளா்ப்புத் தந்தை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பழனியை அடுத்த போடுவாா்பட்டியை சோ்ந்தவா் ராமசாமி (56). இவா் கடந்த சில காலமாக மற்றொரு குடும்பத்துடன் வாழ்ந்து வந்தாா். இவரது வளா்ப்பு மகன்கள் வசந்த் (19), சதீஷ் (22). ராமசாமி கடந்த சில மாதங்களாக தினமும் குடித்து விட்டு வீட்டில் வந்து சண்டை போட்டு வந்துள்ளாா். இதுகுறித்து இரு மகன்களும் பலமுறை எச்சரித்துள்ளனா். ஆனால் அவா் அதை கேட்காமல் கடந்த 28 ஆம் தேதி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளாா். அப்போது மகன்கள் இருவரும் அங்கேயிருந்த கத்தியால் ராமசாமியை குத்தியதில் அவா் படுகாயமடைந்தாா். உடனடியாக அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு பழனியில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தாா். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மகன்கள் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.