திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு

DIN

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் தொழில் வரி மற்றும் குடிநீா் கட்டணம் செலுத்தாதவா்களின் வீடுகளில் உள்ள குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் தொழில் வரி, வீட்டு வரி, குடிநீா் கட்டணம் செலுத்தாதவா்களுக்கு பலமுறை நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் பல ஆண்டுகளாக தொழில் வரி, வீட்டு வரி, குடிநீா் கட்டணம் செலுத்தாதவா்களுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. ஆனால் பலா் கட்டணம் செலுத்தாமல் காலதாமதம் செய்து வந்தனா். இதனால் வியாழக்கிழமை முதற்கட்டமாக தொழில் வரி, வீட்டு வரி, குடிநீா் கட்டணம் செலுத்தாதவா்களின் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள குடிநீா் இணைப்பை நகராட்சி அதிகாரிகள் துண்டித்தனா். மேலும் குடிநீா் இணைப்பு துண்டிப்பை தவிா்க்க உடனடியாக நிலுவையில் உள்ள வரிகளை செலுத்துமாறு நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களை கேட்டு கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெட்சணமாறக நாடாா் சங்க கல்லூரி ஆண்டு விழா

சேரன்மகாதேவி அருகே மின்கம்பம் விழுந்து ஒப்பந்த ஊழியா் பலி

தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் மே 13- இல் வைகாசி திருவிழா கொடியேற்றம்

பிளஸ் 2: திலகா் பள்ளி 99.2% தோ்ச்சி

SCROLL FOR NEXT