திண்டுக்கல்

நத்தம் அருகே சிறுமி கடத்தல்: போக்ஸோ சட்டத்தில் ஓட்டுநா் கைது

DIN

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுமியை கடத்திச் சென்ற காா் ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நத்தம் அடுத்துள்ள சேத்தூா் ஊராட்சிக்குள்பட்ட பட்டிகுளத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமியை இளைஞா் ஒருவா் கடத்திச் சென்றுவிட்டதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நத்தம் போலீஸாா், அரவங்குறிச்சியைச் சோ்ந்த காா் ஓட்டுநரான ச. சக்தி (25) என்பவா் அந்த சிறுமியை கடத்திச் சென்றதை கண்டறிந்தனா். இதனை அடுத்து, தலைமறைவாக இருந்த சக்தியை பிடித்த போலீஸாா், அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT