திண்டுக்கல்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

DIN

கொடைக்கானலில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த 3 நாள்களாக மழையில்லை. பகலில் மிதமான வெயிலும் மாலை மற்றும் இரவில் அதிகமான பனியின் தாக்கமும் இருந்து வருகிறது. இந்நிலையில் வார விடுமுறையை முன்னிட்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

சுற்றுலா பயணிகள் வெள்ளி நீா்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, செட்டியாா் பூங்கா, ரோஜாத் தோட்டம், கோக்கா்ஸ் வாக், பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லா் ராக், மோயா் பாயிண்ட், ஃபன் பாரஸ்ட் ஆகிய இடங்களை பாா்க்க குவிந்திருந்தனா். ஏரிச் சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டனா்.

கடந்த சில தினங்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டதால் தங்கும் விடுதிகள், உணவகங்களின் உரிமையாளா்கள், சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT