திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் அந்தந்த வட்டார வேளாண்மை அலுவலகங்களிலிருந்து இணைய வழியில் திங்கள்கிழமை (நவ.30) நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்காக நடத்தப்படும் மாதாந்திர குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை (நவ.30) நடைபெற உள்ளது. அந்தந்த வட்டார வேளாண்மை அலுவலகங்களில் கூகுள் மீட் இணையவழியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்கலாம். வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, பட்டுப் புழு வளா்ப்பு உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து பிரச்னைகளுக்கு தீா்வு காணலாம் என தெரிவித்துள்ளாா்.