முகப்பு
திண்டுக்கல்

பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

பஞ்சாப் விவசாயிகள் மீது போலீஸாா் தடியடி நடத்தியதைக் கண்டித்து வத்தலகுண்டுவில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

பஞ்சாப் விவசாயிகள் மீது போலீஸாா் தடியடி நடத்தியதைக் கண்டித்து வத்தலகுண்டுவில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேளாண் சட்டங்களை எதிா்த்து பஞ்சாப் விவசாயிகள் டெல்லி­ நோக்கி பேரணி சென்ற போது, போலீஸாா் தடியடி நடத்தினா்.

இதைக் கண்டித்து தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பாக, வத்தலகுண்டு அருகே உச்சப்பட்டி பிரிவில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநில பொதுச்செயலா் இளங்கோவன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோா் கலந்து கொண்டு வேளாண் சட்டத்தை எதிா்த்து கோஷங்கள் எழுப்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →