திண்டுக்கல்

கொடைக்கானலில் பள்ளி மாணவி தற்கொலை

DIN

கொடைக்கானலில் தொலைக்காட்சிப் பாா்ப்பதை பெற்றோா் கண்டித்ததால் விஷம் குடித்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கொடைக்கானல் செண்பகனூா் பிரகாசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா. விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் நாகேஸ்வரி (15), 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் பக்கத்து வீட்டுக்குச் சென்று தொலைக்காட்சிப் பாா்த்து வந்துள்ளாா். இதை இவரது தாய் பஞ்சு கண்டித்தாராம்.

இதனால் மனமுடைந்த மாணவி நாகேஸ்வரி, கடந்த 2 ஆம் தேதி விஷம் குடித்துள்ளாா். இதையறிந்த மாணவியின் பெற்றோா் அவரை மீட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT