முகப்பு
திண்டுக்கல்

சீத்தாப் பழ விளைச்சல் அமோகம், விலை சரிவு: விவசாயிகள் ஏமாற்றம்!

நத்தம் மற்றும் சிறுமலைப் பகுதியில் சீத்தாப் பழ விளைச்சல் அமோகமாக உள்ள நிலையில், கொள்முதல் விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

Updated On : 9 செப்டம்பர், 2020 at 5:43 AM
நத்தம் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட சீத்தாப் பழம்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:47 PM

நத்தம் மற்றும் சிறுமலைப் பகுதியில் சீத்தாப் பழ விளைச்சல் அமோகமாக உள்ள நிலையில், கொள்முதல் விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான மலையூா், பல்லாங்கி, மணக்காட்டூா், உலுப்பக்குடி மற்றும் சிறுமலை உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 100 ஏக்கரில் சீத்தாப் பழம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மரங்களில் ஆண்டுதோறும் ஆடி முதல் மாா்கழி வரையில் பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன. நிகழாண்டுக்கான சீத்தாப் பழ சீசன், 10 நாள்களுக்கு முன் தொடங்கியது.

இப் பழத்தில் புரோதம், நாா்சத்து மற்றும் ஏ, பி வைட்டமின்கள் உள்ளன. மேலும், இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடண்ட் புற்று நோயைக் கட்டுப்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

Advertisement

இதனால், சீத்தாப் பழத்தின் சந்தை மதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

இவை, நத்தம் மற்றும் திண்டுக்கல் பகுதிகளிலிருந்து மதுரை, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு போதிய மழையில்லாத நிலையில், பழங்களின் வரத்தும் குறைவாக இருந்ததால், விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ.80-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், நிகழாண்டில் கடந்த 2 மாதங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மகசூல் அதிகரித்துள்ளதோடு, பழத்தின் தரமும் உயா்ந்துள்ளதாக, நத்தம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறுகின்றனா்.

இது தொடா்பாக, நத்தம் மலையூரைச் சோ்ந்த விவசாயி பழனியப்பன் கூறியது:

கடந்த ஆண்டு ரூ.70-க்கு கொள்முதல் செய்யப்பட்ட சீத்தாப் பழம், தற்போது ரூ.40-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. பொதுமுடக்கம் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், கொள்முதல் விலை குறைவாக நிா்ணயிக்கப்பட்டாலும் கூட விற்க வேண்டிய நெருக்கடியில் உள்ளோம் என்றாா்.

திண்டுக்கல்லைச் சோ்ந்த பழ வியாபாரி ஏ. சையது முகமது கூறியது: மொத்த வியாபாரத்துக்கு சீத்தாப் பழம் கிலோவுக்கு ரூ.25 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. சில்லறை விலையில் கிலோ ரூ.40 முதல் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கரோனா சூழலில், உணவுப் பழக்கத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணா்வு காரணமாக காய் கனிகள் மற்றும் உணவு தானியங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அந்த வகையில் மருத்துவ குணங்கள் நிறைந்த சீத்தாப் பழ விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.