தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!
தமிழகம் வரும் நிதின் நபின் குறித்து....
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், இரண்டு நாள் பயணமாக இன்று(ஏப். 12) தமிழகம் வருகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் வருகைதரும் நிதின் நபின் இன்றும்(ஏப். 12) நாளையும்(ஏப். 13) தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”நாளை முதல் இரண்டு நாள் பயணமாக நான் தமிழகம் வரவுள்ளேன். இந்தப் பயணத்தின் போது, ராமநாதபுரம் மற்றும் அறந்தாங்கியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறேன்.
மேலும் சாத்தூர், மதுரை தெற்கு மற்றும் கந்தர்வக்கோட்டை ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள ரோட் ஷோக்களிலும் பங்கேற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப். 15- ஆம் தேதி கன்னியாகுமரி வரவுள்ளார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளார்.
அதேபோல, பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பலரும் பிரசாரத்துக்காக தமிழகம் வரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
BJP National President Nitin Nabin is arriving in Tamil Nadu for the second day of his visit to conduct election campaigning.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.