ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்
ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறித்து...
ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் (ஞாயிற்றுக்கிழமை ஏப்.12) தெரிவித்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கியது. தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில் ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப்.8) அதிகாலையில் அறிவித்தார்.
இந்தப் போரை முழுமையாக நிறுத்த அமெரிக்கா-ஈரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வரும் நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி ஈரான் மற்றும் அமெரிக்க தூதுக் குழுக்களை பாகிஸ்தான் வருமாறு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்தார்.
Advertisement
இந்த நிலையில் அமெரிக்கா வைத்த முன் நிபந்தனைகள் காரணமாக பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை தொடங்காமல் சனிக்கிழமை (ஏப்.11) தாமதமாகத் தொடங்கியது.
இந்தப் பேச்சுவாா்தையை நடத்தும் அமெரிக்க குழுவுக்கு அந்நாட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ஈரான் குழுவுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பகோ் கலிபாஃப் ஆகியோர் தலைமை வகித்துள்ளனர். அமெரிக்க குழுவில் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா், மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கான தூதர் ஸ்டீவ் விட்காஃப் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஈரான் குழுவில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செயலர் அலி அக்பர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தையானது 21 மணிநேரம் நடந்து முடிந்தது. அதன்பிறகு பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறுகையில், ”நாங்கள் 21 மணிநேரம் பேச்சுவார்த்தையில், ஈரானியக் குழுவுடன் பல கலந்துரையாடல்களை மேற்கொண்டோம்.