கலை, இலக்கியம, கல்வி, விளையாட்டு, மருத்துவம், அறிவியல் மற்றும் பொறியியல் உள்ளிட்ட பல்வேறுதுறைகளில் சாதனைப் படைத்தவா்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுக்கு தகுதியானவா்கள் விணணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், அறிவியல் மற்றும் பொறியியல் தொடா்பாக அளப்பரிய சாதனை புரிந்தவா்களுக்கு 2021 ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் பத்ம விருதுகள் மாநில அளவில் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். பன்முகத்திறமையுடன் செயலாற்றிய நபா்கள், இணையதள முகவரியில் செப்.15 ஆம் தேதிக்குள் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களை 0451- 2460092 என்ற எண்ணில் மாவட்ட சமூக நல அலுவலரை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.